ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

கைபேசியின் தீமைகள்

தீமைகள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை, 7வயத்திற்கு உட்பட்டோர் மேலும்கர்ப்பிணிப்பெண்கள் கைபேசியில் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாம டவர்






கிடைக்கவில்லைஎனில்(sim card) வேறு ஒன்றை மாற்றுகிறோம்உரிமையாளரின் கவனத்திற்கு கொண்டுசெல்கிறோம் உடனேஅவர்கள் கதிர் வீச்சின் தரத்தை உயர்த்துகின்றனர்.கிணறு வெட்டின கதைதான் பக்கத்துவீட்டுக்காரன் இரண்டடி ஆழம் அதிகப்படுத்தினால் அதற்குமேல் இரண்டடிஅதிகப்படுத்துகிறோம் அப்படித்தான் 600மில்லிவாட்ஸ் அளவை 4000மில்லிவாட்சாக மாற்றிவிடுகின்றனர் அப்பொழுது கதிர்வீச்சின் அளவுஅதிகமாவதால் பாதிப்புகளும் நமக்குஅதிகமாகிறது . இதனால் பல நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகளை நாம் ஏற்ப்படுத்திக்கொடுக்கிறோம் ஒருநாளைக்கு 30நிமிடங்கள்பேசினாளே ஆபத்துங்கறாங்கஎப்படிப்பட்ட நோய்கள் வரும் என்றால் . 1 தோல் புற்றுநோய். 2 வலிப்பு நோய். 3 மூளை பாதிப்பு. 4 காது கேளாமை. 5இரேத்தப்புற்று நோய் ஒரு நாளைக்கு 30 நிமிடங்களளுக்கு மேல்கைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்தநோய் உருவாகும் சூழல்காணப்படுகிறதாம், ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செய்திகள் பரிமாற்றம் ஏற்ப்படும் பொழுதுநடைபெறுவதுஎன்ன?

அழைப்பவர்-டவர்-பட்டன் மையம்-டவர்-ஆண்டனா-அழைக்கப்பட்டவர்.
இதுதான் நிகழ்வு.

அழைப்பவர்கைபேசியில் இருந்து கதிர்வீச்சுஅழைப்பு டவருக்குச்செல்கிறது பின்பட்டன்மையம் செல்கிறது அழைக்கப்பட்டவர்கைபேசியில் இருக்கும்
ஆண்டனாஅக்கதிர்களை உட்கிரகித்துக்கொள்கிறது அப்பொழுதுதான்
அழைக்கப்படுபவர் கைபேசியில் மனியொலிக்கும் இதுதான் நிகழ்வு இதில்பிரச்சனை என்னவெனில்  இவ்வாறு தொடர்ந்து வெளியகிக்கொண்டு இருக்கும் மின்காந்தஅலைகள் எல்லா பக்கங்களிலும் தெறிக்கின்றன அதில்
கிட்டத்தட்ட பாதிஅளவு அலைக்கதிர்கள் பெயக்கொண்டிருக்கும் இருவரின் தலைக்குள்ளும் ஊடுருவுகின்றது ! கைபேசியின் மின்காந்அலைக்கதிர்வீச்சின்
அளவு  ஒருமைக்ரோவேவ்அவனின் அலைக்கதிர் வீச்சிர்க்குச் சமம்.

           இந்த பொல்லாதசெய்தியும் நம்
           காதுகளுக்குக்  கேட்கட்டும்.

கைபேசி வாங்கும் பொழுது நம் கவனிக்க வேண்டியவை.

1 ஒவ்வொரு கைபெசிக்கும் ஒருSARஉண்டு(spesific Absorption rate)இது 1.6w/kg
(wats per kilograme)எந்தஅளவுக்கு குறைவாக உள்ளதோ அதுவே நமக்கும்நல்லது

இந்த விபரங்கள் அறிய நாம் என்ன செய்ய வேண்டும்.


1.உங்கள் கைபேசியின் கையேட்டை பார்க்கவும்.

2. கைபேசியின் நிர்வக்கிகளின் தளத்தின் மூலமாக.

இதிலிருந்து சற்றே நமைநாம் பாதுகாக்க வேண்டும், அதற்க்கு நாம் செய்யவேண்டியது என்ன?

1.Ear phone பயன்படுத்தலாம்.

2.ஒலி பெருக்கியை பயன்படுத்தலாம்.

3கைபேசியை காதோடு ஒட்டாமல் சற்று தள்ளி வைத்துப்பேசலாம்.

4.அழைப்புகொடுத்து அவர் எடுக்கும் வரை கையில் வைத்து அழைப்பை
    ஏற்றபின் காதில்வைத்துப்பேசலம்.

5.டவர் கிடைக்காத பொழுது பேசாதிருப்பதே நலம்.

6.தேவைக்கேற்ப பேசுதல்(சமையல் என்ன? சாப்பாடுஎன்ன?என்பதைவிட)

7.தொலை பேசியைப் பயன்படுத்துவது மிகச்சிறந்தது.


                           தீமைகள்;
தேவைக்கேற்ற உறவுகளை
தினந்தோறும் வளர்த்துவிடும்!
தேவையான உறவுகளை!
நினைத்தவுடன் முறித்துவிடும்!.

காதலர்கள்என்றுசொல்லி
கருத்துக்களே இல்லாமல்
ம்...................அப்புறம்என்றே
காலத்தைக் கரைத்திடுவர்!

காதலதைக் கொச்சையாக்க
கைபேசி ஒன்றுபோதும்
வேண்டாத நபர்கள்-நம்மை
வெறுப்படையச் செய்திடுவர்

காதினிலே இணைப்பு வைத்து
காற்றுப்போலவேகம்வைத்து
காலன்வந்து மரிக்கை கொள்ள
உயிர் ஒன்றும் மலிவு அல்ல!

கதிர்வீச்சின் காரணத்தால்!
கேட்கும் திறன் குறைந்துபோகும்!
சிற்ச்சில பறவைகள் இனம்அழிந்தேபோகும்!
மூளையிலும் கட்டிவரும் -அதனால்

கதைகள் பேசாமல் காரியங்கள்பேசிடுவோம்
கையிலும் பயிலும் வேண்டாம் -நாம்
சற்று தூரம் தள்ளிவைப்போம
நம் ஆயுளைத் தக்கவைப்போம்.!

நாம் கைபேசியை கையில்எடுத்தவுடன் நமது ஆரோக்யத்தில் கவனம்
வைத்துப்பேச வேண்டும் நமதுபாதுக்கப்பிற்காக நாம் அதிக கவனம்
செலுத்தவேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.மீண்டும் நமது ஆரோக்யத்தில்
வேறுஒருதகவலில்பார்ப்போம்.நன்மைகள்வெளியிட்ட அடுத்தநாளே வெளியிடமுடியாத சூழல் .

10 கருத்துகள்:

  1. அனைவருக்கும் அறிந்து கொள்ள தகவல்கள்.... நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ!
      நாம அன்றாட பயன்பாட்டில் நம்மோடு
      அதிகம் இருப்பது கைபேசிதானே, சுவாசித்தல் முதல் மற்றஎல்லா விசயங்களிலும் நம்மோடு நன்மையும்
      தீமையும் கலந்து வருவதால் தான் இந்த எச்சரிக்கைநன்றிசகோ.

      நீக்கு
  2. நல்ல பொறுப்புள்ள பதிவு
    வாழ்த்துக்கள்
    தொடர்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. sir,வணக்கம்! இந்தப்பதிவிற்கு தங்களின் கருத்துக்கள்
      வரும் என்பது எனக்குத் தெரியும்.நன்றிsir

      நீக்கு
  3. கைபேசிமேல் என்ன கோபம்? நன்மையை விடவும் தீமையே அதிகம் இருப்பதுபோல எழுதிவிட்டீர்களே?
    “எந்தக் கருவியும் நல்ல கருவிதான் -கண்டு பிடிக்கையிலே அது நன்மையென்றாவதும் தீமையென்றாவதும் பயன்படுத்தும் விதத்திலே“ என்பதுதானே உண்மை? எனினும் உங்கள் குரலில் இருந்த எச்சரிக்கை சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா வணக்கம்! கைபேசிமேல் கோபப்படலாமா? அப்படிநான்கோபப்பட்டால்என்னைகட்டிவச்சுஉதைக்காமவிடமாட்டார்கள். கண்டிப்பாக நாம் பயன் படுத்தும் விதத்தில்தான் உண்மை, உண்மை ,அதனால்தான் ஐயா.........இந்தப்பதிவு நன்றி.

      நீக்கு
  4. கவிதை அருமை டீச்சர். அதைப்போலவே விளக்கம் பல புதிய தகவல் சுமந்து அறிவு களஞ்சியமாய் விளங்கியது! செல் வாங்கும் போது கவனிக்க வேண்டியது, செல் பயன்படுத்தும் முறை என எல்லாமே அட்டகாசம்!!

    பதிலளிநீக்கு
  5. நன்றி டீச்சர் அதிக நேரம் ஒதுக்கி செயல்படனூன்னு ஆசைஇருக்கு ஆனா முடியலேன்னு சொல்லக்கூடாது
    முயற்சிக்கனு, sir கருத்துப்போட்டிருக்காங்க பாத்தீங்களா?

    பதிலளிநீக்கு
  6. ஆஹா இத்ன நாளா ஆக்கலயே அருமை தோழி..

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோ,
    உங்கள் பதிவை வலைச்சரத்தில் இணைத்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றேன்...நன்றி

    பதிலளிநீக்கு