வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

மாணவர்கள்

கவலை இல்லாதகற்சிலைகள் !
கபடமில்லாத கார்முகில்கள் !
சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகள்!
சூட்சுமமில்லா சுவாசக்காற்று !
அசையும் அஜந்தா ஓவியங்கள்!
அழகான அர்த்தங்கள்!
விகற்பமில்லா விட்டில்கள்!
விருட்சமாக இருக்கும் விதைகள்!
சந்தோசத்தின் சாளரங்கள்!
புகழ்பெறாத போர் வீரர்கள்!
கூவித்திரியும் குயில்கள் !
ஆடித்திரியும் மயில்கள் !
அட்டகாசமான அபூர்வங்கள் !
சினங்கொள்ளச்செய்யும் சேட்டைகள்!
நமை சீண்டிப்பார்க்கும்சிற்றுளிகள்!    

சனி, 22 ஆகஸ்ட், 2015

நமதுநாயகன்



சுதந்திரதினவிழா நிகழ்சிக்காக எழுதினேன் 14/8/2015அன்றுதான் எழுதிக்கொடுத்தேன் பார்த்துப்படி என்று கூறி. அவன்பார்க்காமலே
ஒப்புவித்தான் ஹரிகரன் எனும் மாணவன் படங்கள் உள்ளன ஆனால்
 ஏனோ  copyஆகுதுpasteஆகமாட்டுது






எழுச்சிநாயகனே !
இளைஞர்களின்காவலனே 1
ஆயிரம் தலைவர்கள்வந்தாலும்
என்னுள் ஆழப்பதிந்தவர் நீதானே !
இந்த்கிரகம் விட்டு வேறு
எந்தகிரகம்சென்றீர் ஐயா?
மாற்று கிரகத்தில் இருந்து
மாணவர்களின் அழைப்பேதும்
வந்ததுவோ !
நீபிறந்த தீவில் உருவானதே !
ஒரு மக்கள் தீவு !!
நாற்புரமும்மக்கள் கூட்டம்!
நடுவிலே நின் புனித உடல்!
மெய்கள் திரண்டனவே ஐயா !
உந்தன் பொய்யான மெய்கண்டு !
முப்படையும் உனைச் சுமக்க
மூச்சுவிடாமல் இருந்தாயே !
மூச்சிருந்தால் விடு வீரா ?
தன்தமையனுக்கும்
தகைமை செய்ய நினைத்தீரோ.......... ?
அதனால்தான் அவசரமாய்ச்சென்றீரோ ?
இன்னுயிர்   பிரியும் வரை
இனிமையாய் உரையாற்றிய
உத்தமரே !
ஊழல் உலவும் இந்த
அரசியல் உலகத்தில்
நீமட்டும் விதிவிலக்காய்,
சிரம்மேல் பணி உமக்கு
பதவிகளும் பல உண்டு,
ஆனால் சிறுவனின்
சிறுமடல்கண்டால் கூட
சடுதியில் விடைதருவீர்
பலமொழிகள் அறிந்தவர் -நீர்
குழந்தை மொழி விஞ்ஞானமொழி
பாமரர்மொழி பகுத்தறிவுமொழி
அன்புமொழி அறிவியல் மொழி
அறிவுமொழி அந்நியமொழி
இத்தனைமொழிகளையும்
இனிப்பேச யார்  உளரோ
"நான் என்ன தரமுடியும் "
என்று ஓர் இயக்கத்திற்கு
பெயரிட்ட பெருமானே !-நீர்
இன்னும் என்ன செய்யவேண்டும் ,
இந்தியாவின் இனியமகனே !
இயல்பே !எளிமையே !
உண்மையே !நேர்மையே !
மாசற்ற மனித நேயமே !
நின் அறிவுரை கேட்க நாங்கள்
செவிமடுத்து நிற்கின்றோம் !
சீக்கிரம் வருவீரா ........?
எண்ணற்ற தலைவர்களின்
சாதனைகள் கேட்டதுண்டு
படித்ததுண்டு ஆனால் -நின்
சாதனைகள் கண்டு கண்டு
வியந்ததுண்டு நீ வாழ்ந்த
காலத்தில் நாங்களும்
வழ்ந்ததுவே !!!!
இப்பிறவிப் பயனாகும் .

  

புதன், 19 ஆகஸ்ட், 2015

தவறேதும் செய்தாளா??????????????

எங்கோஒருஇடத்தில்நடக்கும்விடயத்திற்காகஅல்லதுசெய்தித்தாள்களில் நாம் காணும் செய்தி, நமக்கு வலியை ஏற்படுத்தியது உண்டு நமக்குத்தெரிந்த 
ஒரு பத்துவயது சிறுமி (ஒரு நாயால் )பாழ்படுத்தப்பட்டசெய்திகேட்டுதுடித்துப் போனேன் நான்வலைப்பக்கம் வராததற்கு இதுவும்ஒருகாரணம் 
 எதுவுமே பிடிக்கவில்லைபெற்றோர் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மிகச்சரியாக நடந்துகொள்ள வேண்டும் அந்தக்குழந்தை         செய்தபாவம்தான் என்ன ????????????????????????????????????????????அத்துனைகேள்விகள் எனக்குள். 
மனதுமிக ,மிக. வலிக்கிறது எந்தக்குழந்தைக்கும் உத்திரவாதம் இல்லை நான் பணியில் சேர்ந்து இருபது வருடங்களும் ,தலைமை ஆசிரியராகி பத்துவருடங்களும் முடிந்துவிட்டது எவ்ளவோவிடய ங்களைசந்தித்ததுண்டு  
ஆனால் இதுமிகுந்த வலியைத்தந்தது .


                           பச் கைக்கொடியது       படர இருந்தது 
                           பா ழ்படுத்திவிட்டாயே -அது 
                            படரவும் இல்லை 
                            பக்குவப்படவும் இல்லை 
                            பறித்துப் புதைத்தாயே -படுபாவி 
                            ஊட்டப்பட்டது உணவோ 
                            என நினைத்து 
                            விபரீதம் தேடி அலைகிறதே 
                            அந்த விட்டில்ப்பூச்சி 
                            நஞ்சை ஊட்டி 
                            நாசம் செய்தவனே  
                            வய்ப்புக்கிடைத்ததால் 
                            தீர்த்தாய் உன்பசி 
                            வயத்துக்குமீறிய பசியால் 
                            வட்டமிடுகிறதே அந்த 
                            பருவமடையாத 
                            பசும்பேதை 
                            ம்கூம் ,உன்நிழலில் 
                           பல உயிர்கள் 
                            இல்லையேல் நசுக்கியே 
                            கொன்றி ருப்பேன் 
                             உனை நான்.               

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தாமதமும், வரவேற்பும்

வலைத்தள நண்பர்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் !
அனைவரும் நலமா ? பல பணிகள் காரணமாக வலைப்பக்கம்
வர இவ்வளவு தாமதம்.........!! வருத்தம் தான் .(எங்களுக்கு ஒன்னு
வருத்தமில்லையே )மைண்ட் வாய்ஸ் கேட்குது இனியும்
வராம இருந்தா பதிவர்திருவிழாவில் சுத்தமா அடையாளம்
தெரியாம போயிடுவேன் .

                நாமெல்லாம் கொண்டாட எங்க ஊரில் திருவிழா
இதைப்பெருவிழாவாக்க தங்களின் வருகையும் ஆதரவும்
மிக மிக அவசியம் இது பதிவர்களுக்கான  விழாமட்டுமல்லாமல்
பதிவர்களின் குடும்பத்திற்கான திருவிழாவும்கூட  அனைவரும்
குடும்பத்தோடுவருக .(கீதாவின் வலைப்பக்கம் நம்மசீனா
ஐயாசொன்னதுபோல் )