வலைப்பக்கம் வந்து வருடங்கள் கடந்ததால் அனைத்தும் மறந்து விட்டது மீண்டும் என்னை புதுப்பித்துக் கொண்டு விரைவில் நானும் வலைப்பக்கம் வருகிறேன் நன்றி.
Malathi
செவ்வாய், 29 ஜூன், 2021
செவ்வாய், 17 நவம்பர், 2015
ஏக்கங்கள்
கடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும்
மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் மத்தவங்களை யார்? பாப்பாங்க இதுதான் எனது முதல் ஆசை .
அன்புத்தோழி கீதா குறிப்பிட்ட 10பேரில் நானும் ஒருவர் (இப்படியெல்லாம் இழுத்துக்கொண்டுவர வேண்டியுள்ளது )
நான் எதற்கும் ஆசைப்படுபவள் அல்ல தேவைகள் நிறைவேற முயற்சிக்க வேண்டும் தேவைகளுக்கான விருப்பப்த்தை ஆசைஎன்று சொல்ல இயலுமா?
பின்வரும் 10பற்றியும் ஒவ்வொரு நாளும் நான் நினைப்பது உண்டு .
1. சோம்பேறித் தந்தையர்களின் குழந்தையாய்ப்பிறந்து பசியோடு பள்ளிக்கு
வந்து மதிய உணவுக்காக கடிகாரத்தைப்பார்க்கும் குழந்ததைகள் பிறக்காமலே இருக்க வேண்டும் .
2.அன்பிற்காக மட்டும் குழந்ததைகளை பெற்றெடுக்கும் பெற்றோர் வேண்டும்
3.குழந்தைகளின் தாயோ அல்லது தந்தையோ மாறாத நிலை வேண்டும் .
4.மாணவர்களின் திறமைக்கு ஏற்ற (1முதல் 8வரை )தேர்ச்சி கொடுக்க
அரசு ஆணை இடவேண்டும் .
5.சில அரசு ஊ ழியர்கள் தான் பெறும் ஊதியத்திற்காகவாவது உழைக்க வேண்டும்.தன்னையும் தன் புகழையும் உயர்த்திக் கொள்ளமட்டும்
எண்ணாமல் உழைக்கும் மனம் பெறவேண்டும் .
6ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு
விடுதலை வேண்டும் .
7.மழையால் மக்கள் படும் கஷ்டங்கள் மாற முறையான மற்றும் நிலையான
தீர்வுகாண அரசுக்கு புத்தி கூறவேண்டும் .
8.உலகில்மாசு குறையவும் மழைபெறவும் வெற்றிடங்களிளெல்லாம் மரங்கள் வேண்டும் .
9.சுய நலமில்லாத ஆட்சி வேண்டும்.
10.ஒவ்வொரு நாளும் நான் வலைப்பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகள் படித்து கருத்திட வேண்டும் ,நான் எழுத நினைப்பதை நான் சொல்லும்
பொழுதே என்வலைப்பூவில் பதிவாக வேண்டும் .
மிகப்பெரிய வேலையே இனிமேதான் 10பேர் யாரு ..........?
1சகோ வைகரை
kavi-vaikarai.blogspot.in
2.ஐயாபொன்.கருப்பையா
pudugaimanimandram.blogspot.in.
3.சகோ மகா.சுந்தர்
mahaasundar.blogspot.in
4.சகோ.அ.பாண்டியன்.
pandiyanpandi.blogspot.com
5.சகோ.மணவைஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.com
6.சகோ.அனிதா
anithashiva.blogspot.in
7.சகோ.ஆ.பூபாலகிருஷ்ணன்.
karurboobageethan.blogspot.in
8.சகோதரி.த.ரேவதி
tamizhal.blogspot.com
9.சகோ.குருநாதசுந்தரம்
kurunathans.blogspot.in
10சகோதரி.மகேஸ்வரிபாலச்சந்திரன்.
balaamagiblogspot.com
தொடரட்டும் நண்பர்கள்.
2.ஐயாபொன்.கருப்பையா
pudugaimanimandram.blogspot.in.
3.சகோ மகா.சுந்தர்
mahaasundar.blogspot.in
4.சகோ.அ.பாண்டியன்.
pandiyanpandi.blogspot.com
5.சகோ.மணவைஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.com
6.சகோ.அனிதா
anithashiva.blogspot.in
7.சகோ.ஆ.பூபாலகிருஷ்ணன்.
karurboobageethan.blogspot.in
8.சகோதரி.த.ரேவதி
tamizhal.blogspot.com
9.சகோ.குருநாதசுந்தரம்
kurunathans.blogspot.in
10சகோதரி.மகேஸ்வரிபாலச்சந்திரன்.
balaamagiblogspot.com
தொடரட்டும் நண்பர்கள்.
புதன், 30 செப்டம்பர், 2015
நேர்மறைவேண்டும்வேண்டும்.
நேர்மறை வேண்டும் வேண்டும்
வா என்று அழைத்திடவோ!
வாய் ஒன்றும் சும்மா இல்லை
சைகையால் தலையையாட்டும்
செல்பேசியோடு ஒன்றியாச்சு!
மதிப்பூட்டிய உணவுகள் செய்து
உண்டுகொண்டே ஓடுவதால்
நார்ச்சத்து நசுங்கிப்போச்சு
நவதாணிய உணவுகள் கூட
நவீனமயம் ஆகிப்போச்சு
கூட்டுக்குடும்பம் கேள்வியாச்சு
முதியோர் இல்லம் பெருகிபோச்சு
சித்தப்பா அத்தையெல்லாம்
சிலதூரம் தள்ளிப்போச்சு
எங்கேயோ யாரோபோல
அறிமுகம் செய்யும் காலம் வந்தாச்சு
நடை உடை மாறிப்போச்சு
நாம் முகம் சுழிக்க வழிஉண்டாச்சு
ராமாயண காலமெல்லாம்
ரதம்போல ஓடிப்போச்சு
விரும்பினால் வாழ்ந்திடுவோம்
இல்லையேல் நண்பர்களாவோம்
நெடுந்தொடர்கள் பார்த்துக்கொண்டு
அச்சச்சோ! அம்மம்மா! என்றே
கணவன் உண்ணும் உணவுக்கு பதில்
மோரை ஊற்றிடும்
நிலையும்
உண்டாச்சு!
வகை(4)முன்னேறிய உலகில்பண்பாட்டின் தேவை(புதுக்கவிதை)
வலைப்பதிவர்திருவிழா2015மற்றும்தமிழ் இணையக்கல்விக்கழகம்
நடத்தும்மின்தமிழ்இலக்கியப்போட்டிகள்2015க்காகவே எழுதப்பட்டது
வேறெங்கும் வெளியிடப்படவில்லைமேலும்போட்டிமுடியும்வரை
வேறெங்கும்வெளியிடமாட்டேன்என்று உறுதிகூறுகிறேன்.
வகை(4)முன்னேறிய உலகில்பண்பாட்டின் தேவை(புதுக்கவிதை)
வலைப்பதிவர்திருவிழா2015மற்றும்தமிழ் இணையக்கல்விக்கழகம்
நடத்தும்மின்தமிழ்இலக்கியப்போட்டிகள்2015க்காகவே எழுதப்பட்டது
வேறெங்கும் வெளியிடப்படவில்லைமேலும்போட்டிமுடியும்வரை
வேறெங்கும்வெளியிடமாட்டேன்என்று உறுதிகூறுகிறேன்.
செவ்வாய், 22 செப்டம்பர், 2015
புதுகையில்இருப்பதுதான் என்ன??????????தொடர்ச்சி(2)
பழையஅரண்மனைஎன்பதுநகரின்மையப்பகுதியில்அமைந்துள்ளது அதுதற்பொழுதுவணிகவளாகங்களாகமாற்றப்பட்டுஒருகோவில் (தட்சிணாமூர்த்திகோவில்)மட்டும்தான்நினைவுச்சின்னமாகஉள்ளது வீடுகளும்கடைகளும் உள்ளன.
மாவட்ட ஆட்சியரகம்
புதியஅரண்மனைதற்போதுமாவட்டஆட்சியரகமாக செயல்பட்டுவருகிறது.இதில்மாவட்டத்தில்உள்ளமுக்கிய
அலுவலகங்களும் இயங்கி வருகிறதுஇதுசுமார்100ஏக்கர்பரப்பளவு
கொண்டதாகும்.இதுதமிழகத்தில்எங்குமில்லாதஒருசோலைவனமாக காட்சியளிக்கிறது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தை திரு.ராஜாரகுநாத தொண்டைமான் அவர்கள் 1769 முதல் 1789 வரைஆட்சிசெய்தார்.
புதுக்கோட்டைசமஸ்தானத்தை திரு.ராஜாவிஜயரகுநாத தொண்டைமான்அவர்கள் 1789 முதல் 1807 வரை ஆட்சிசெய்தார்.
புதுக்கோட்டைசமஸ்தானத்தை திரு.ராஜாவிஜயரகுநாதராய தொண்டைமான் அவர்கள் 1807 முதல் 1825 வரை ஆட்சி செய்தார்.
புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.ராஜாரகுநாத தொண்டைமான் அவர்கள் 1825 முதல் 1839 வரைஆட்சி செய்தார்.
புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.ராஜாராமச்சந்திர தொண்டைமான்அவர்கள் 1839 முதல் 1886 வரை ஆட்சி செய்தார்.
புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்அவர்கள்1886முதல்1928வரைஆட்சிசெய்தார்..
புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.ராஜகோபால தொண்டைமான் அவர்கள் 1928 முதல் 3.3.1948 வரைஆட்சி செய்தார்
குதிரை வீரர்கள்
நகரின்முக்கிய நினைவுச்சின்னங்கள்
1) நீதிமன்றம்
2) த.சு.லு.ச.மேல்நிலைப்பள்ளி(டிஇஎல்சி)

புவனேஸ்வரி அம்மன் ஆலயம்
சாந்தநாத சுவாமி ஆலயம்
அறியநாச்சியம்மன் ஆலயம்
அரசு மருத்துவமனை
விருந்தினர்மாளிகை
முதல் பேரூந்து
பல்லவன்குளம்
புதுக்குளம்
மாட்சிமைதங்கிய மன்னர்கல்லூரி
நகர்மண்டபம் (டவுன்ஹால் )
நகராட்சி அலுவலகம்.
காலம் கருதி மேலும் படங்களும் விபரங்களும் பதிய இயலாக் காரணத்தால்
நட்பு உள்ளங்களே நீங்கள் நேரில் கண்டு மகிழ அழைக்கும் பதிவர் குழு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)