புதன், 28 ஜனவரி, 2015

கொடுப்பதற்கு ஓர் மனம் வேண்டும்-2


          எங்கள் பள்ளி 4ம் வகுப்பு மாணவி இளஞ்சியம்  தாயைபற்றிய மனதை உருக்கும் பாடல்

தாய்மை எனும் தன்னிகரில்லா உறவைப்பற்றிய வலியைக்கொடுக்கும் பாடல்   இட்டுக்கட்டி பாடுவதில் இளஞ்சியம் கெட்டிக்காரி
மாணவியாக இருப்பதைவிட ஆசிரியராக இருக்க ஆசை அவளுக்கு அதிகம்
நான்கு மாணவர்களை மட்டுமே நிகழ்ச்சிக்கு தயார்செய்திருந்தோம்.  ஆனால் மதிய உணவு இடைவேளையில் நானும் ஒரு பாட்டுப்பாடுகிறேன் என்று என்னிடம் கேட்டாள்.  நான் எப்போதும போல் எங்கே பாடு என்றேன்.   பாடிக்கொண்டு இருக்கும்பொழுது இயக்கப்பொறுப்பாளர்கள் புதுக்கோட்டையில் ஈஸ்வரன் மாளிகை திறப்பு விழா அழைப்பிதழோடு  மூவர் வந்தனர்.  அவர்களும் அந்தப்பாடலை கேட்டுவிட்டு வட்டார செயலாளர் தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிதிரு .முருகேசன்  தன் சட்டைப்பையில் இருந்து ரூ. 100./ ஐ எடுத்து இளஞ்சியத்திடம் கொடுத்து வாழ்த்தினார்.  திரு.வீரசர்வேஸ்வரன் வட்டாரத்தலைவர்  தனது பையில் இருந்து சாக்லேட்டைஎடுத்துக்கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.  நானும் உதவி ஆசிரியரும் கண் கலங்க அமர்ந்திருந்தோம்.  ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பில் பணமுடிப்பு வழங்கப்பட்டது.    அதில் வரும் வரிகளில் ஒருசில வற்றை நான் இங்கேகுறிப்பிடுகிறேன்.

 உன் உடலு சதையை பிச்சுக்கொடுத்தவளே,
 உலகத்திலே...........எனக்கு ஆறுதலா
உன்னைப்போல வேறயாருமில்ல
தன்னிலே சூரியன,,,நானும் பார்க்கிறேன்
தரையில் நடக்கும் தெய்வத்தோடநானும் வாழுறேன்
முக்குனியே மூச்சு முட்ட  கத்துனியே காதுகிலிய
பெத்தெடுத்த தாயே உன்னை எப்பிடித்தான் நா மறப்பேன்
கல்லுமண்ண தின்னுடுவேன்னு கவனமா பார்த்துக்கிட்ட
கஞ்சியதா நீ குடிச்சி  சோத்தையெல்லா எனக்குதந்த
கோழிகூட தங்குஞ்சிய வளர்ந்ததும் கொத்தி விரட்டும்.
தோளுக்கு மேல் வளந்தாலும் தாய்ப்பாட்டு தாலாட்டும்‘
 அம்மா........................என்ன நீ மடியில சுமந்தவ
உன்ன நா மனசில் சுமப்பவ .

வாழ்த்துரை வழங்குதல் 




                                            

நினைவுப்பரிசு வழங்குதல் 


ஆடைகள் வழங்குதல் 

                      வாழ்த்துரை வழங்கி நன்றி கூருதல் 



தங்களின் பொன்னான நேரத்தை எம்பள்ளிக்காக தந்து நல்ல பல பயனுள்ள கருத்துக்களைத் தந்து எம்மாணவர்களுக்கு  வாழத்துக்களை வழங்கிய
அத்துனை நல்லஉள்ளங்களையும்  வணங்கி மகிழ்கிறோம்
 நன்றி.......நன்றி.....நன்றி.


நினைவுப்பரிசு கொடுக்கும் பொழுது நுரிலின் உள்ளே நன்றியோடு
 எழுதிய வரிகள்

சகோதரர் திருஇக்பால் அவர்களுக்காக 

தேனியின் மறு உருவே 
தேர்ந்தெடுத்த நன்முத்தே
ஈகை குணமே
இறைவனின் வரமே
கோடையில் வீசிய 
குளிர்ந்த காற்றே
வறண்ட நிலங்களின்
வற்றாத நதியே
பிஞ்சு உள்ளங்களை 
பிடித்த கரமே‘
கொடைஉள்ளமே
நின் தலைமுறைகள் 
தலைக்கட்டும்  தடையின்றி
நிறைவேறட்டும் தங்களின்
 குறிக்கோள் குறையின்றி
பல்லாண்டு பல்லாண்டு
பல கோடி நுறாண்டு
நோயின்றி நீர் வாழ
வாழ்த்துகின்றோம்
 நாங்களெல்லாம்

நான் மேலே குறிக்கோள்என்று கூறியதற்கு காரணம்  நான் சகோதரர் திரு.இக்பால் அவர்களிடம் பேசும்போது, இதுபோன்று மாணவர்களுக்கும் ஈகை குணம்வளரவேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

சென்ற தீப ஒளி திருநாளுக்கு  ஆடைகள் வழங்கியதற்காக நான் எழுதிய வாழ்த்து மடல்

கோடிகள் உள்ளவர்கள்
கோடான கோடி உண்டு.
கொடையுள்ளம் கொண்டவர்கள் 
குறிப்பிடும் ஒரு சிலரே
மாணவச்செல்வங்களோ
மகிழ்ச்சியோடு காத்திருக்க‘
மனசார ஒருவர் வந்து
மகிழ்விக்க உடை கொடுத்தார்
வண்ண வண்ண உடைகள்
அல்ல அல்ல வகை வகையாய்
ஆடைகளை கண்டு, கண்டு 
வாய்மூட மறந்துநின்ற 
என் மாணவச் செல்வங்களை
காணவோ கண் கோடி வேண்டும்
ஏழையின் சிரிப்பிலே தான்‘
இறைவனைக்காண வேண்டும்‘
என்பது நாம்அறிந்த ஒன்றே
உண்மையில் அதை நாங்கள் கண்டோம்
உவகையால் அகம் மகிழ்ந்தோம்.
வம்சம் தலைத்தோங்க மனதார
நன்றி கூறி வாழ்த்துகின்றோம்.

                                     நன்றி வணக்கம்.

கொடுப்பதற்கு ஒர் மனம் வேண்டும்.

"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு '"

என்பதற்கேற்ப கொடையுள்ளம் கொண்ட ஆயத்த ஆடையகம்
நிறுவனத்தின் உரிமையாளர் திரு முகமது இக்பால் அவர்கள்
எங்கள்பள்ளிமாணவர்களுக்கு  இரண்டாவதுமுறையாக
(1தீபாவளி ,2பொங்கல் )என்மாணவர்களை மகிழ்சிக்கடலில்
மூழ்கவைத்தார்கள்.
     இந்த நிகழ்வு ஏற்படக்காரணமாக இருந்த அன்புச்சகோதரர்

1.எஸ் .டி .பசீர் அவர்களும்வலதுபுறம் முதலாவதாக ,
(யு,என்,டிபுள்யூ)


2.எங்கள் பள்ளியின் பசுமைக்கரங்கள் அன்புஅண்ணன் (புரவலர் ,கிராமக்கல்விக்குழு தொண்டுநிறுவன உறுப்பினர்)

3,பள்ளிப்புரவலர் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் எல்லா நிகழ்சிகளுக்கும்
முன்னதாகவே வந்து என்மாண வர்களோடு கலந்துரையாடுபவர்.

4ஹாஜியார் திருக்குறளை நேசிப்பவர் மனிதநேய பண்பாளர்  சாந்தசொரூபி

5.திரு.எம்.ராஜாதாஜ்முகமது, செயலளர், பெரியபள்ளிவாசல்
மாணவர்களிடம் கேள்விகள் தொடுப்பவர்.

6,திரு கே.எஸ்.முகமது இக்பால், தாரகை ஆயத்த ஆடையகம், உரிமையாளர்
கொடைவள்ளல்  பணவுள்ளம் கொண்ட பண்பாளர்

7.திரு.இராம, செல்வராஜ், பள்ளி கல்விக்குழுத்தலைவர்,  நகர்மன்ற உறுப்பினர்
பொதுப்பணிகளில் ஆர்வமுள்ளவர், தலைசிறந்த பேச்சாளர்

8,  திரு.பழனிவேலு , பள்ளிக்கல்விக்குழு துணைத்தலைவர்,
எங்கள் பள்ளியின் அனைத்து முன்னேற்றத்திற்கும் உறுதுணைபுரிபவர்


நான்காம் வகுப்பு மாணவன்     ஹரிகரன் குடிநீரின் தேவை பற்றி
பேசியது .


இதுஒரு வாலு மு.சந்தோஸ்குமார் இரண்டாம் வகுப்பு  100லிருந்து 1வரை
 தலை கீழாக சொல்லுதல்.

நான்காம் வகுப்பு மாணவி   தேவப்பிரியா 65திருக்குறளும் ஒப்புவித்தல்

இதன் தொடர்ச்சி அடுத்தபதிவுபோல் தொடர்கிறது.  அதை இணைப்பதற்கான தொழில்நுட்பம் தெரியாததால் தலைப்பில்லாமல் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது.  தயவுகூர்ந்து அதையும் பார்த்து கருத்துக்கள் இடவும்.

                                                  நன்றி...........

புதன், 14 ஜனவரி, 2015

இறைவா நின் அருள் வேண்டும்!



நிலத்தடி நீர் காக்க வேண்டும் !
நெகிழியைஒழிக்க வேண்டும் !
நோயிலா வாழ்வு வேண்டும் !
நோக்கமுள்ள இளைஞர்கள்வேண்டும் !(2)
குற்றமிலா அரசு வேண்டும் !
குப்பையிலா உலகு வேண்டும் !
குடிநீரைக் காக்க வேண்டும் !
மாசிலா பூமி வேண்டும் !
மகத்தான வாழ்வு   வேண்டு!
இடைவிடாது உழைக்க வேண்டும் !
ஈகைத்திறன் மிகுதல் வேண்டும் !
தமிழ்மேலும் தழைக்க வேண்டும் !
தர்மமிகு வாழ்வுவேண்டும் !


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
  

திங்கள், 12 ஜனவரி, 2015

நள்ளிரவில் கேட்ட குரல்

ஆனந்தஜோதி இதழில் நடந்த கவிதை போட்டிக்காக எழுதியது தேர்வாகவில்லை 















உன் தாய் கண்ணில் பட்டிருந்தால்?
உனை தங்கம்போல் தாங்கிய
தமையன்மார் பார்த்திருந்தால்?
நாசக்காரர்களை நையப்புடைத்திருப்பார்.
நசுக்கியே போட்டிருப்பார்.

பொன்னே, பொன்னின் நிகரே.
பொற்கிளியே!
பூத்திருந்த புதுப்பூவே!
சித்திரமே சீர்குலைந்தாய்,
சித்தபிரமை ஆனதற்கு,
சீமாட்டியே நீ என் செய்தாய்,

அழகெல்லாம் அழுக்கேறி
கருங்கூந்தல் பிரியாகி‘
அவிழ்ந்த உடை அலங்கோலம்
ஆனாலும் உன் எழில் கண்டு
அற்ப உடல் அரக்கர்களால்
அழிக்கப்பட்டாய் அப்பொழுதே,
பெண்மை அலறுகிறது....

ஆனால் நீ மட்டும் மௌனமாக
உன் மௌனம்  கண்டு
அழுதது நள்ளிரவுமட்டுமல்ல
நாங்களும் தான் சோதரியே!