வியாழன், 15 மே, 2014

மலைகள் சமதளமானது

மதுரை செல்லும் வழியில் திருப்பத்தூர்தாண்டிமலைகள்
அணிவகுத்து நிற்கும் அழகே அலாதிதான் ஆனால் அந்த மலைகளெல்லாம் தற்பொழுது
தரை மட்டம் ஆகிவிட்டது
அந்தவழியாக செல்லும் பொழுதுயானைமலை முடிவு எப்பொழுதுவரும் எனநான்பார்த்துக்கொண்டிருப்பேன் ,ஏனென்றால்அப்புறம் கொஞ்ச தூரம்தான் மதுரை அப்பாடா! என்றிருக்கும்  நல்லவேளை யானைமலையை தப்பிக்கவைத்தனர், இல்லையேல்இனிவருங்காலங்களில் நம்வாரிசுகளுக்கு மலைகள் கூட மாதிரிகளாகத்தான்இருந்திருக்கும் மலைசெவ்வகங்களாக............கனசெவ்வகங்களாக பிளக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்தன அல்வாக்கடையில் இனிப்புகலள்போல்; இன்னும்
சிறிதுகாலங்களில் நாம் அந்தவழியாகச்செல்லும்பொழுது இந்த
இடத்தில்தான்ஒருமலை இருந்தது................ இங்கிருக்கிற வீடுகளை விட
உய...............ரமா  இருக்கும்   என்று  கதை கூறவேண்டும்.
                       
                              மலைகள் மடிந்தன(மடிக்கப்பட்டன)
                             
                               மவுசுகூட்டும் மர்பிlகளாக!!!!
                             

18 கருத்துகள்:

  1. அப்படித்தான் பலவற்றை கூற வேண்டும் போலுள்ளது... ம்...!

    பதிலளிநீக்கு
  2. ஆம்சகோ, நீங்கள்சொல்வது முற்றிலும்உண்மை,நன்றிசகோ.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரி
    இயற்கையை நாம் வஞ்சித்தால் நமக்கு தான் மிகப்பெரிய இழப்பு என்பதை ஏற்க மறுக்கும் வணிகப்புத்தியால் விளைந்த விளைவு இது. கண்டிப்பாக மாதிரிகளில் தான் இனி மலையை எதிர்கால சந்ததிகள் பார்க்க வேண்டியிருக்கும் போல. பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணிகம் வளமாக வளங்கள் அழிக்கப்பட்டது நன்றி சகோ.

      நீக்கு

  4. வணக்கம்!

    மலையைக் குறித்து வருந்தும் மனத்தின்
    நிலையை உணருமென் நெஞ்சு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையால் மட்டுமே கருத்துக்கள் கூறும் கவிஞரேநன்றி.

      நீக்கு
  5. மலைமுழுங்கி மகாதேவன்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட திலலையா? நாங்கள்லாம் பேப்பர்ல பாத்தமே? ஆனைமலை தப்பித்தற்கும் ஒரு பெரும் போராட்டம்தான் காரணம். முல்லையும் குறிஞ்சியும் முறையாகத் திருடி, பாலை என்பதோர் பைந்தமிழ்நாட்டை உருவாக்கிவரும் மருத-நெய்தல் வீரர்களின் மாபெரும் சாகசம் இது! ஐந்திணை மைந்தர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவணக்கம்.உங்க அளவுக்கு ம்.........ஹூம்கொஞ்நூண்டு....தெரியும் அதனால்தான்
      தப்பிக்க வைத்தனர் என்ற வார்த்தை நம்மாளுங்க
      உண்மையிலேயே பெரிய ஆளுகதான் பின்ன ஐவகைநிலங்களையும் ஒரே வகையா மத்திட்டாங்கள்ள கில்லாடிங்க!!!நன்றிஐயா.

      நீக்கு
  6. மனிதம் ஊர மலையும் தேயும்

    பதிலளிநீக்கு

  7. வணக்கம்!

    ஏனோ புதிய பதிவில்லை! நன்காய்ந்து
    வானோ மதியோ வழங்கு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவணக்கம்! விடுமுறை என்பதால் விருந்தினர் வருகை வேலைபளு சற்று அதிகம் விரைவில் பதிவுகள்வழங்குவேன் நன்றி ஐயா.

      நீக்கு
  8. // மலைசெவ்வகங்களாக............கனசெவ்வகங்களாக பிளக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்தன அல்வாக்கடையில் இனிப்புகள்போல் // என்று குறிப்பிட்டு அல்வாவை விழுங்குவது போல விழுங்கி விட்டார்கள் என்று, மலையும் மலை சார்ந்த இடமும் படும்பாட்டை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. வலைச்சரத்தில் கண்டேன். வாழ்த்துக்கள். நமது கலையும் பண்பாடும் விழுங்கப்படும் வேதனையான செய்தியைக் கண்டேன்.

    பதிலளிநீக்கு