ஞாயிறு, 30 நவம்பர், 2014


புளகிதம்

அனைவருக்கும் வணக்கம் ,
              நீண்டநாட்களுக்குப்பிறகு வந்துள்ளேன் வராததற்குக் காரணம் சொன்னால்மிக....மிக...நீளமானதொடர்(மெகாசீரியல்)அதனால்இதற்கானஎனதுவருத்தத்தைமட்டும்தெரிவித்துக்கொண்டுஎன்தளம்வந்துகருத்துத்தெரிவித்தஎன்அன்பிற்க்குரியசகோதசகோதரிகளுக்குஎன்பணிவானநன்றிகளை உரித்தாக்கிகொண்டுஎன்பதிவினைத்தொடர்கிறேன் .
                       
 எங்கள்பள்ளியில்பயிலும்மாணவர்களின்பெற்றோர்கள்அனைவருமே கூலிவேளைசெய்பவர்கள்ஆண்களில்85நன்றாகக்குடிப்பவர்கள்குழந்தைகளின்நிலைஎவ்வாறிருக்கும்நமக்குத்தெரியும்அதனால்எங்களாலமுடிந்தஅளவுகுறைஇல்லாமல்பார்த்துக்கொள்வோம்கொடுக்கும்மனம்படைத்தோரின்நட்பு கிடைத்ததால் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்வோம் வீதி இலக்கிய கலைக்கூட்டத்தில்.திரு.பஷீர்என்றசகோதன்னைஅறிமுகம்செய்து கொண்டபோது ,சகோவின் உதவியோடு  என்மாணவனின்
தந்தைக்கு (ஒருகால் இல்லை )ஏதாவது உதவி கேட்கவேண்டும்  என்று
அன்றே அதைச் செய்தேன்அவருக்கு மூன்று சக்கரங்களுடன் ஒருவண்டியும்
கிடைத்தது ,மூன்றாம் கூட்டத்தில் உங்கள்மாணவர்களுக்கு  எழுதுபொருட்கள் எதாவது வேண்டுமா?  என்று  சகோ  என்னிடம்  கேட்டபொழுது
போதுமானதை  அரசாங்கமே  கொடுத்துவிடுகிறது  அய்யா, மாணவர்கள்   விரும்புகின்ற  வேறு எதாவது  கொடுக்க  முடியுமா ? என்று  கேட்டவுடன்
 கருணை  உள்ளத்துடன்   தீபஒளி  திருநாளன்று  மாணவர்கள்  அனைவர்க்கும்
அவர்கள்  கொடுத்த பரிசால்என்பிள்ளைகள் பெற்றவை .அளவில்லா மகிழ்ச்சி,




                                                   


          கொடையுள்ளம்  கொண்டவர்
     
             கொடுத்தார்  ஓர்  அறிய உடை

            அணிந்தவன்  நடந்தான்

            அங்குமிங்கும்  பார்த்தபடி

            எனைக்கடந்தான்

             இங்கேவா என்றழைத்தேன்

             இரு ஞாயிறின்  ஒளி  சேர

             ஓடி வந்து  என் முன் நின்றான்

             என்ன ராஜா  தீபஒளியா ?

             என்றுநான்  கேட்கும்போதே

              'ம்'  என்று  கூறி  சட்டையை

              வாயில்வைதான்  அட பனியனா ?

               என்றதுமே !  ஆமாம் ,என்று

               தலையசைத்தான்.என் கண்கள்

               குளமானது  மனம் இலேசானது

                புதிய  உடைகளாக  அவன் உடுத்தியது

               சீருடைகளை  மட்டும்தானே !


ஆனால் தீபஒளித்திருநாளைக்குஎன்பிள்ளைகள் இதுவரை அணிந்திடாத
மிகவும்தறமானஉடைகள் ஐக்கியநல கூட்டமைப்பின்முன்னிலையில்
எங்கள் ஊரின் தாரகை ஆயத்தஆடைகடையின கொடைவள்ளல்வழங்கினார்
திருநாள் விடுப்புமுடிந்துபள்ளிக்கு இளவரசர்களும் இளவரசிகளும்வருகை
தந்திருந்தனர் பூரித்துப்போனோம்.அதுமட்டுமல்லாமல் பொங்கள் திருநாளைக்கும் என்மாணவர்களுக்கு இதுபோன்றஆடைகள் உண்டு
 விளம்பரத்தில் பார்பதெல்லாம் மட்டுமல்லாமல் கோழிபிரியாணி இப்படிஎத்தனை எத்தனையோஅவர்களின் விருப்பம்போல் வாங்கிக்கொடுப்போம், ஆனால்அப்பொழுது இருந்த மகிழ்சியைவிட இது இரட்டிப்பு மகிழ்சியை தந்தது அவர்களுக்கு மேலும் இருபள்ளிகளுக்கு இதுபோல் வழஙப்பட்டது.
          
                    கோடிகள்பலஇருந்தாலும்கொடுப்பதற்குஒருமனம்வேண்டும் அப்படியேகொடுத்தாலும்பெருபவர்களின்அகம் மகிழவேண்டும்,திருஇக்பால்
,அவர்கள் முழுமனதோடுகுடும்பத்தாரின்அகமகிழ்வோடு அந்த ஆடைகளை வழங்கினார் மேலும் பல உதவிகள்  செய்துள்ளார் இன்னும் என்ன உதவி மாணவர்களுக்கு வேண்டும் என செய்வதற்கு தயாராய் உள்ளார்.
 இந்த நேரத்தில் அவருக்கு என் பள்ளியின்சார்பில் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்.


    


                   
                               

18 கருத்துகள்:

  1. திரு. இக்பால் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    தொடர்க...

    பதிலளிநீக்கு
  2. டீச்சர்
    அவர் வாழ்படவேண்டியவர் தான் ஐயமில்லை. ஆனால் எப்பொழுதும் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் என்ன நல்லது செய்யமுடியும் என சிந்தித்தபடி இருக்கும் உங்களை தான் முதலில் வாழ்த்தவேண்டும். உங்களை என் முதல் தலைமையாசிரியராக பெற்றதற்கு என்றென்றும் மகிழ்ந்திருக்கிறேன்:)) இந்த பதிவை பார்க்கும் போது குற்ற உணர்ச்சியாக உள்ளது. என்ற போதும் நீங்கள் மீண்டும் வந்தது மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டீச்சர்,நான்சொல்லவேண்டியதை நீங்க சொல்றீங்க
      மூன்றுமுறைஎனக்குவாய்ப்புக்கொடுத்தும் தவறவிட்டதுநான்தான்,அடடா...காலரைத்தூக்கிவிட்டுக்கறே.டீச்சரிதைப்படிக்கும்போதுமனதில் ஏதோஒருஉணர்வுஅதைசொல்லமுடியல.

      நீக்கு
  3. சுமார் ஆறுமாதம் கழித்து வந்திருக்கும் உங்கள் பதிவைப் பார்த்து மகிழ்ந்து, முதலில் என் வலைப்பக்கத்தில் உங்கள் இணைப்பைக் கொடுத்துவிட்டு வந்து படித்தேன். கொடையாளர்தம் நல்ல உள்ளத்தைக் கொண்டுசெலுத்தி நம் ஏழைமாணவர் பயன்பெறப் பாடுபடும் உங்கள் நல்ல உள்ளம் போற்றுதற்குரியது சகோதரி. தொடரட்டும் உங்கள் தொண்டும் பதிவுகளும். தொடர்வோம் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா....காலத்தைக்கூடகவனத்தில்கொண்ட உங்களை நான்என்ன சொல்ல .....என்கடமை அதுதானேஅண்ணா.

      நீக்கு
  4. அடுத்தடுத்த பதிவுக்காவது பொருத்தமான படங்களைச் சேர்த்துப் போடுங்கள்... அப்போதுதான் அதிகம்பேர் வந்து படிப்பார்கள்.. அதுவும் ஒரு கிரியேட்டிவ் திறன்தான்.

    பதிலளிநீக்கு
  5. தங்களது சமூகப் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அய்யாவனக்கம்,தஙலைப்போன்றோர்வழ்த்துக்கள் வேண்டும்
    எனக்கு, நம்கடன் பணிசெய்து கிடப்பதுதானேஅய்யா,.

    பதிலளிநீக்கு
  7. நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலைப்பக்கம் வந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். தங்களின் மகிழ்ச்சியை தங்கள் கட்டுரையின் வரிகள் தெரிவிக்கின்றன.

    ( சொல்லாமல் இருக்க இயலவில்லை. புளகாங்கிதம் என்பதனைத்தான் புளகிதம் என்று டைப் செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். Phonetic தட்டச்சு முறையில் இவ்வாறு அடிக்கடி நேரிடும். புளகிதம் > புளகாங்கிதம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவணக்கம்,எப்டி இருக்கீங்கதங்கலுக்கு நான் பல முறை பதில் பதிந்து அது வெளியாவது போல்
      இருக்கும் ஆனால் காட்ச்சிக்கு இருக்காது.

      நீக்கு
    2. இபோதான் வெளியாகியுள்ளது தங்களின்வாழ்த்துக்கள்
      மகிழ்ச்சிக்குரியது, சொன்னாலும் தப்பில்லை phonetic
      தட்டச்சுதான் பயன்படுத்துகிறேன், புளகிதம்,புளகாங்கி
      தம்=மகிழ்ச்சி என்பதனால்தான் ,நன்றி.

      நீக்கு
  8. "கோடிகள் பல இருந்தாலும் கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும்" மிகச் சரியாக சொன்னீர்கள். கொடையுள்ளம் கொண்ட நல்ல உள்ளங்ககளுக்கும் ,உங்கள் செல்ல குழந்தைகளுக்கும்,இதை செயல்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    தங்களின் சிறப்பான எண்ணம் கண்டு மனம் மகிழ்ந்து.. மேலும் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்... சகோதரி....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு