ஞாயிறு, 21 டிசம்பர், 2014

விஜய் தொலைக்காட்சியில்












இன்று  நீயா நானா நிகழ்ச்சியில் புடவைமோகம் கொண்டவர்கள், புடவைமோகம் தவறானது என்ற தலைப்பில் கோபிநாத், விறுவிறுப்பாக நிகழ்ச்சியினை நடத்திக்கொண்டிருந்தார்.  அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் தெரிவித்த கருத்துக்க்ளில் சிலர் சொன்ன கருத்துக்கள் எதார்த்தமானதாகவும், வியப்பானதாகவும் இருந்தது.  ஒரு புடவை எடுப்பதில் அதனை உடுத்துவதில், ரசனை இருக்கவேண்டும்தான் ஆனால் மோகம் என்பது தவறான ஒன்றாக எனக்குப்படுகிறது.  

               புடவை என்பது நமது  பாரம்பரிய உடை பெண்களுக்கு அழகை தரும் மிக அழகான உடை,  இதையே தற்பொழுது கவர்ச்சி உடையாக அணியும் கலாச்சாரம் மாறிக்கொண்டு வருகிறது.   தொலைக்காட்சிகளிலும் சென்னை போன்ற மாநகரங்களிலும் இவர்கள் உடுத்தியிருப்பது புடவைதானா என்று யோசிக்கும் அளவிற்கு உடுத்தும் விதம் மாறிக்கொண்டிருக்கிறது.  

               புடவையை அலமாரியில் அடுக்கிவைப்பது அதை கலையாமல் கையாளுவது ஒரு கலைதான், ஆனால் வி.தொ.காயில் புடவையில் மோகம் கொண்டவர்கள் கூறிய கருத்துக்கள், 

 •  புது புடவை எடுத்தால் அததைப்பார்த்தவுடனே ஒரு கிளு கிளுப்பு ஏற்படும்.

 •  அலமாரியில் அடுக்கிவைத்த புடவைகள் சரியும்பொழுது சாக்லேட் சவரில் நனைவதுபோல் இருக்கும்-

 •  புதுப்புடவை அல்லது கட்டாத புடவையை பார்த்தவுடனேயே ஏதாவது ஒரு காரணத்தை கொண்டு கடைக்குச்சென்று வருவது.

•    டென்சன் வரும்பொழுது புடவைகளை  கலைத்து பின் மடித்துவைக்கும்பொழுது டென்சன் குறையும்.

•    பட்டுப்புடவையின் வாசனையே ஒரு கிளு கிளுப்பை உருவாக்கும்.

•    சேலை பார்த்துப்பார்த்தே பழசாயிரும்.  

•    அடுக்கிய சேலைகள் சரியும்பொழுது நம்மை ஆசிர்வதிப்பதுபோல் இருக்கும்.

•    அடுக்கிவைத்து கலைக்காமல் எடுப்பது பிடிக்கும் இதற்கு என் கணவர் உனக்கு சான்றிதழ் தரப்போகிறார்கள் என்று கூறுவார்.  

             கோபிநாத் கூறியது.

          ( நான் உங்களுக்கு சர்டிபிகேட் தரம்மா )

         இப்பதான் சார் எனக்கு மனது நிறைவாயிருக்கு

•      நான் கட்டுற புடவை மாதிரி மற்றவங்க கட்டக்கூடாது.  

•      என் புடவை பார்த்து நாலு பேர் கருத்துச்சொல்லனும்.

•      அடுத்தவங்க எடுத்துக்கொடுக்கும் புடவையை வேறு ஒருவரிடம் கொடுத்துவிடுவேன்.  

•    நாத்தனார் மாமியாருக்காக எடுக்கும்போது ஏனோதானோ என எடுப்பேன். 

•    என் புடவையை என் மகளுக்கு கூட கொடுக்கமாட்டேன். 

•    நம்மைப்போல் நம்மைவிட உயர்பதவியில் இருப்பவர்கள் கட்டினால் சந்தோசம்.  ஆனால்  நமக்கு கீழே வேலைசெய்யும் துப்புரவு தொழிலாளி போன்றவர்கள் கட்டினால் மனது தாங்காது.  அடுத்தநாளே அந்தப்புடவையை ஒதுக்கிவிடுவேன்.


ஆள் பாதி ஆடை பாதி என்னும் பழமொழிக்கு ஏற்ப நாம் நாசுக்காக உடுத்திக்கொள்வது உண்டு  ஆனால் இப்படி பெண்கள் மோகம் கொண்டுடிருப்பது எவ்வளவு நேரத்தையும் மற்றவர்களின் மனதையும் புண்படுத்துவதாக உள்ளது.  

            நான் கட்டும் புடவையை நமக்கு கீழ் உள்ளவர்கள் கட்டக்கூடாது என்று கூறுவது எவ்வளவு அநாகரிகமான வார்த்தையோடு அல்லாமல் மனிதநேயமற்ற பேச்சு.  அதற்கு மிக அழகாக கூறினார் கோபிநாத்.  காந்திஜி படிக்கும்போது கோட் சூட் அணிந்து தான் வாழ்ந்தார் ஆனால் அவர் மாறவில்லையா, தனது கடைசி காலம் வரை அணிந்த ஆடை நாம் அறிந்தஒன்று-  இதில் புடவை எடுப்பதை புடவையை அடுக்குவதை தனது பொழுதுபோக்கு என்று கூறியதும் மிகவும் வியப்பாகவும், வருத்தமாகவும் உள்ளது.  

         நாம் நமக்கு பிடித்த சினேகமான நபர்களுக்கு பரிசாகக் கொடுப்பது  புடவைதான். திருமணத்தின்போதும் மற்ற சடங்குகளின்போதும் பயன்படுத்துவதும் மற்ற உடைகளைவிட நமக்கு சபையில் மரியாதையும்,பெற்றுத்தரும்உடை புடவையே.  ஆனால் இதுவே வேலையாக இருப்பது ஆச்சர்யம்தான்.

        
            அதில் ஒரு அம்மா கூறிய விடயம் பொருள்களை விற்றாவது நான்புடவை எடுத்துவிடுவேன் என்பதுபோல் கூறினார்கள்.  அவர்களிடம் இருக்கும் மொத்த புடவைகளின் எண்ணிக்கை 700க்கு மேல் வைத்திருப்பதோடு புடவை எடுப்பதில் இருந்து என்னால் மீண்டு வர இயலவில்லை இது  எனக்கு ஒரு நோய்போல் உள்ளது. இச்செய்தி ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. 

           எந்தவொரு பெண்னும் மற்றவரைப்போல் நாமும்  அதேபொருளை வாங்கவேண்டும் என்று எண்ணினாளோ அது அவள் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாகும். நமக்கு தேவையானதை மட்டும் நாம் தேர்ந்தெடுத்து வாங்குவது புத்திசாலித்தனம் என்பது எனது கருத்தாகும்.  தங்களின் கருத்துக்களை பதியுங்கள்-

   
         



17 கருத்துகள்:

  1. எது எப்படியோங்க ஆனால் புடவை கட்டி வருபவர்களை பார்த்தால் எங்கள் மனதில் ஏற்படும் கிளுகிளுப்புக்கு அளவே இல்லைங்க..ஹும் புடவை கட்டி வருபவர்களை பார்க்க கொடுத்து வைச்சிருக்கனும் அந்த வாய்ப்புகள் இங்கு எனக்கு கிடைக்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ, ஐயோ,வாயாடி சகோ வாச்சே
      நீங்க அந்தநிகழ்ச்சியை பாத்தீங்ளா? எதிர் அணியினர்
      புடவை கட்டுவதில் உள்ள இடர்பாடுகள் பற்றி பல காரணங்கள் சொன்னார்கள்.உங்களோட ஆதங்கத்துக்கு நான் ஒரு வ்ழி சொல்லவா? சப்பாத்தி
      கட்டையும் கையுமாக இருக்கும் என்சகோதரி பாடுவது எனக்குக் கேக்குது உங்களுக்கு கேக்கலையா? (அடுத்தாத்து அம்புஜத்த..........பட்டுபுடவையை.....)

      நீக்கு
  2. வணக்கம்

    இந்த காலபெண்கள் இப்படியான தகவலை காதில் எடுப்பார்கள் என்பது சந்தேகம்... அருமையாக தொகுத்து பதிவாக வெளியிட்ட தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேகம்தான் அதையே பைத்தியக்காரத்தனமா
      பன்னக்கூடாதுல்ல நன்றி சகோ.

      நீக்கு
  3. கலக்குங்க டீச்சர் சூப்பர்! நச்...நச்னு சொல்லிருக்கீங்க. ஆமா என்கிட்டே இருக்கிறதுல பாதி புடவைகள் நீங்க அன்பளித்தது தானே:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டீச்சர் அந்த நிகழ்ச்சியை நீங்க பார்த்தீர்களோ..........?
      அதானே. பார்த்திருந்தா நீங்க இப்புடிச்சொல்ற
      ஆள் இல்லையே. ஆனாலும் உங்க சிரிப்பைப்
      பார்த்தால் எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கு
      நான் உங்களுக்குப் பிடித்தது போல் இருக்க
      வேண்டும் என்று நினைப்பேனா இல்லையா?

      நீக்கு
    2. நான் அந்த நிகழ்ச்சி பார்ப்பதே இல்லை டீச்சர்:) எம்புட்டு நேரம்:((( அடேயப்பா!!! ஆனா நீங்க எனக்கு கிப்ட் பண்ணினா எல்லா புடவையும் அத்தனை ரசனையானவை என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை:)_

      நீக்கு
  4. பெண்களும் புடவைகளும் பற்றி நன்றாகவே சொன்னீர்கள்.
    டீவியில் நீயா நானா பார்க்க எனக்கு நேரம் இருப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும், முழுவதும் பர்க்க முடியவில்லை
      இந்தப் பகல் பொழுது ஏன் சீக்கிரம் போய்
      விடுகிறது என்று நானும் நினைப்பது
      உண்டு நன்றிஐயா.

      நீக்கு
  5. சிறப்பு விருந்தினர்களும் சளைக்காமல் பேசினார்கள்... அதை விட முதலில் பரிசு வாங்கிய பெண்மணி = Great + இரண்டாவது பரிசு வாங்கிய "திருந்திய" அம்மாவும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்து வைத்தவர் சகோ நீங்கள் முழுவதும்
      பார்க்க முடியவில்லை

      நீக்கு
  6. நமக்குத் தேவையானதை வாங்குவதே புத்திசாலித்தனம்

    பதிலளிநீக்கு
  7. தேவைக்கு மேல் சேர்ப்பது என்பது பல வகைகளில் சிக்கலை உண்டாக்கும்.

    பதிலளிநீக்கு
  8. ஆம் ஐயா, பலபெண்கள் சிக்களில் மட்டிக்கொள்வதற்கு
    இதுவும் ஒருகாரணம்.

    பதிலளிநீக்கு
  9. புடவை நமது கலச்சாரமான, பாரம்பரிய உடை அதை இன்றைய கால பெண்கள் (சில பெண்கள்) சீரழித்து வருகிறார்கள் 80 வேதனையே...

    பதிலளிநீக்கு
  10. டீச்சர் தங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு